Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: காவிரி ஆறும், நண்டுகளும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    காவிரி ஆறும், நண்டுகளும்

    ஆற்றங்கரையில்
    நீச்சல் தெரியாமல்
    அமர்ந்திருப்பேன்.


    ஆற்றில் எங்கோ சென்ற அப்பா
    நண்டுகள் பிடித்து வருவார்
    இறந்து போன நிலையில்


    கொடுக்கு துண்டிக்கப்பட்டு
    பிரசவத்தோடு இறந்திருக்கும்
    சில பெண் நண்டுகள்


    ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
    மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
    இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.


    அப்பா சொல்வார்,
    நண்டு உடலுக்கு நல்லதென்று


    சொன்னவர் இங்கில்லை,

    நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
    என் அப்பாவைப் போலவே

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    சற்று நேரத்திற்கு முந்தான் காவிரி உறழ்வை வைத்து ஒரு கவிதை எழுதினேன்..

    நீங்கள் காவிரியில் நண்டுப்பிட்டித்த ஞாபக்தில் எழுதியுள்ளீர்..

    என்ன வியப்பு ?

    பல்யங்களில் பதிந்தப் பதிவுகள் பரலோகம் போனாலும் மறக்காது..

    ஈரமான கவிதை ஆதவா..

    பாராட்டுக்கள்..

    -ஆதி
    Last edited by ஆதி; 07-12-2007 at 05:31 PM.
    அன்புடன் ஆதி



  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட..இவ்ளோ கொடுமைக்காரரா நீங்க...
    கவிதை நன்று..
    காலங்கள் மாறினாலும்.. என்றும் நண்டு உடலுக்கு நல்லது தான்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    சற்று நேரத்திற்கு முந்தான் காவிரி உறல்வை வைத்து ஒரு கவிதை எழுதினேன்..

    நீங்கள் காவிரியில் நண்டுப்பிட்டித்த ஞாபக்தில் எழுதியுள்ளீர்..

    என்ன வியப்பு ?

    பல்யங்களில் பதிந்தப் பதிவுகள் பரலோகம் போனாலும் மறக்காது..

    ஈரமான கவிதை ஆதவா..

    பாராட்டுக்கள்..

    -ஆதி
    நன்றி ஆதி. காவிரியில் நண்டு பிடித்த ஞாபகம் எல்லாம் இல்லை.. சொல்லப்போனால் எனக்கு நீச்சலே வராது.. நண்டு பிடித்த அப்பாக்களை கரையில் நின்று கவனித்ததுண்டு.... (இறுதி வரியில் ஒளிந்திருக்கும் மகனைப் போல)

    சென்னையில் இருக்கும்போது நண்டு தின்றிருக்கிறேன்... அப்போதே முகச்சுளிப்பு... இப்போது முழுவதும் சுளிப்பு... பிடிப்பதில்லை..

    தொடர்கதையாக நீளும் ஒரு நினைவை இங்கே புகுத்தியுள்ளேன்.. என் அப்பா இதில் கவிதைநாயகன்.. தன் அப்பாவை இழந்துவிட்ட நினைவு நண்டுபிடிப்பதில் இருக்கிறது. அது இழக்காமலே எனக்கும்..

    நன்றி ஆதி.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அட..இவ்ளோ கொடுமைக்காரரா நீங்க...
    கவிதை நன்று..
    காலங்கள் மாறினாலும்.. என்றும் நண்டு உடலுக்கு நல்லது தான்.
    என்னைப் பற்றி தெரிந்துகொண்டே இப்படி கேட்கலாமா?

    நன்றிங்க மதி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாழ்வில் பல விடயங்கள் இப்படித்தான் ஆதவா...

    நன்மை, தீமை பற்றி ஆராயாது
    முன்னோர் வழி நடக்கின்றோம்
    விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல்....

    குட்டி நண்டுகள் பிறக்காமலே
    இறக்கின்றன
    ஒரு தந்தையின் தன் மகனுக்கான
    உணவுத் தேடலில்........

    வாழ்வியல் முரண் இது...!!

    நண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது
    ஆனால் நண்டுக்கு.....??!!

    இது நண்டுக்கு மாத்திரமல்ல
    வாழ்வியலில் பல்வேறிடங்களில்
    கன கச்சிதமாகப் பொருந்தக் கூடியது...

    பாராட்டுக்கள் ஆதவரே.......!!
    Last edited by ஓவியன்; 07-12-2007 at 10:30 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
    மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
    இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.

    அப்பா சொல்வார்,
    நண்டு உடலுக்கு நல்லதென்று

    சொன்னவர் இங்கில்லை,

    நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
    என் அப்பாவைப் போலவே
    காவேரிக் கரையில் முளைத்த நெப்பந்தஸ்(Nepenthes) போல் சரேலேன்று
    வார்த்தைகள் நம் நினைவை இழுத்துக் கொள்கிறது.சொன்னவர் மாய்ந்த உணர்வைப் பெற்று தரும் கவி ஆதவா....

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    வாழ்வில் பல விடயங்கள் இப்படித்தான் ஆதவா...

    நன்மை, தீமை பற்றி ஆராயாது
    முன்னோர் வழி நடக்கின்றோம்
    விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல்....

    குட்டி நண்டுகள் பிறக்காமலே
    இறக்கின்றன
    ஒரு தந்தையின் தன் மகனுக்கான
    உணவுத் தேடலில்........

    வாழ்வியல் முரண் இது...!!

    நண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது
    ஆனால் நண்டுக்கு.....??!!

    இது நண்டுக்கு மாத்திரமல்ல
    வாழ்வியலில் பல்வேறிடங்களில்
    கன கச்சிதமாகப் பொருந்தக் கூடியது...

    பாராட்டுக்கள் ஆதவரே.......!!
    ஓவியரே உங்கள் பார்வை மிக அருமை...(ஆதவாவோட தோழனாச்சே) ஆனால் நண்டுக்கு நல்லதா என்று ஆராய வேண்டியதில்லை.. ஏனெனில் அவை நமக்காக படைக்கப்பட்டவை.... முற்றிலும் அழிந்து போக வல்லவையல்ல...

    உங்கள் வரிகள்... எனது கவிதையை அடக்கிவிட்டது....

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by jpl View Post
    காவேரிக் கரையில் முளைத்த நெப்பந்தஸ்(Nepenthes) போல் சரேலேன்று
    வார்த்தைகள் நம் நினைவை இழுத்துக் கொள்கிறது.சொன்னவர் மாய்ந்த உணர்வைப் பெற்று தரும் கவி ஆதவா....
    அம்மா, உங்களின் பின்னூட்டத்தை பெருமையாக கருதுகிறேன்....

    எனது ஆக்கத்தின் பக்கத்தில் உங்கள் பார்வையை செலுத்தியமைக்கு நன்றி.....

    (வெண்பாவில் பெண்பா பாடியுள்ளேன். அருள்பாலிக்கவும்... .)

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நண்டுக் கவிதை நன்று...மனித நண்டுகளை
    என் செய்வது ஆதவா...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    நண்டுக் கவிதை நன்று...மனித நண்டுகளை
    என் செய்வது ஆதவா...
    தின்பதொன்றே வழி...

    நன்றிங்க யவனிஅக்கா..

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பார்வையாளனின் இந்தப் பார்வை அர்த்தம் பல உணர்த்துகிறது.மிக அருமையான பின்னூட்டங்களைப் படித்ததில் என்ன எழுதுவதென்று தெரியாமல்...வாழ்த்துகளும்...பாராட்டுகளும் ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •